Sunday, September 6, 2009

நீர்த்திவலைகளாய்..


உன் பயணச்சுமையை பகிர்ந்துகொள்ள
உடன் வரும் வாய்ப்பில்லை.
நேரம் போவது தெரியாமல்
Sweet Nothings பேச...
அயர்ச்சிக்கு ஆதரவாய்
மெத்தென தோள்கொடுக்க...
உன் அருகில் நான் இல்லை.
பயணக்களைப்பில்
உன் தாகம் தீர்க்கும்
கடைசி மடக்கு தண்ணீரில்...
நீர்த்திவலைகளாய்
நிச்சயம் நானிருப்பேன்.
சீக்கிரம் வந்து தொலை.


-மணிபாரதி துறையூர்