Saturday, March 1, 2014

மெல்லிசை

என் நெற்றியில் முத்தமிட வேண்டாம்
புருவம் வருடி உறங்க வைக்க வேண்டாம்
முதுகில் படர்ந்து காதைக் கடிக்க வேண்டாம்
பாதங்களை மடியிலேந்தி சொடக்கெடுக்க வேண்டாம்
ஆப்பிள் நறுக்கித்தரவேண்டாம்
தேநீர் தந்து புன்னகைக்க வேண்டாம்
என்னிடம் பேசவேண்டுமென்பதில்லை
என்னை  நீ கவனிக்க வேண்டுமென்பதும்
எனக்கொரு பொருட்டல
நீ இயல்பாக இருப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பதும்
விரல் கோர்த்து முகம் சாய்க்கும் கதகதப்பும்
நீ மூச்சுவிடும் மெல்லிசையும் போதுமெனக்கு
ஆயிரமாயிரமிருந்தாலும் உன் அருகாமை போல் வருமா?

-மணிபாரதி துறையூர்