Tuesday, January 19, 2010

காத்திராதே


* நாம் சுற்றித் திரிந்த
இடங்களில் எல்லாம்
சற்று அமர்ந்து செல்கிறேன்
நீ விட்டுச் சென்ற வார்த்தைகள்
இங்குதான் எங்கேனும்
சுற்றிகொண்டிருக்கும்.

* உன் கனத்த கதவுகளை
அகலத் திறந்துகொண்டு
இருண்ட காலங்களில்
வெளிச்சமாய் வருவேன் நான்
எனினும்...
எனக்காக காத்திராதே.


- மணிபாரதி துறையூர்

2 comments: