Sunday, March 11, 2012

எருதின் நோய்


வெய்யில் காலங்களில்
வீட்டுக்கு வருபவர்கள்
ஏசி இல்லையா எனும்போதும்
வேலை கிடைத்தவன்
இன்னுமா இண்ட்டர்வியூக்கு எல்லாம் போறே எனும்போதும்
கார்பைக் வைத்திருப்பவன்
எப்படித்தான் பஸ்லே போறியோ
எனும்போதும்
பழகிப்போய்விட்டது
மெளனமாய் இருக்கவும்
புன்னகைக்கவும்

எனினும்
புன்னகைக்கவோ
பேச்சை மாற்றவோ
கடினமாகத்தான் இருக்கிறது
திருமணப் பத்திரிக்கை வைக்க வந்தவன்
எட்டு வருசமா இதையேதான் சொல்ற
இன்னுமா உனக்கு பொண்ணு தேடுறாங்க
எனும்போது மட்டும்.


-மணிபாரதி துறையூர்

No comments:

Post a Comment